Tuesday 3 April 2012

உயரம்!

உயர்ந்த உடலுக்கு-
ஆரோக்கிய உணவு-
தேவையாம்!

உயர்ந்த உள்ளத்தை-
தரும் தாய் பாலை-
கொடுக்க மறந்தது-
ஏனாம்!?

உடலை மட்டும்-
வளக்கும்-
ஆரோக்கிய உணவு!

மனிதத்தை-
வளர்க்கும்-
தாய் பாலு!
--------------------
சாதனையாளர்-
பணத்தின் -
உச்சத்தை தொட்டவர்!

புண்ணியவாளர்-
உள்ளம் விரிவடைஞ்சவர்!
--------------------------------
வாழ்வின் ஆசை-
விண்ணையும் தாண்டுது!

வாழ்வாதார -
தண்ணியோ கண்ணுக்கே-
தெரியாம-
மண்ணுக்குள்ள போகுது!
----------------------------
குடிசையில-
இருக்கையில-
பக்கத்து-குடிக்கும்
கறி சமைப்பாங்களே!
-அன்று!

அடுக்கு மாடியில-
பக்கத்துக்கு வீட்டுக்காரன்-
பேர் கூட-
தெரியல-
இன்று!
------------------------
உயரத்துல இருந்து-
குண்ட போடுறான்-
எவனாவது செத்தா-
சரியென்று!

பாதிக்க பட்டவங்களுக்கும்-
உயரத்துல இருந்து-
உணவை வீசுறான்-
"போட்டா" சரியென்று!

இவர்களிடம்-
யார் சொல்வது-
இதெல்லாம் - தவறென்று!
-------------------------------
உயர்ந்த-
தாழ்ந்த-
தகுதிகள்-
இறைவன்-
கொடுப்பதாகும்!

உயர்ந்து விட்டால்-
தலை கீழ் ஆட்டம்--
மனிதனாகும்!
----------------------
உயர்வதும்-
தாழ்வதும்-
உலகின் நியதி!

உயர்ந்து விட்டால்-
செய்யலாமோ-
அநீதி!?
--------------------
உயர போக போக-
மூச்சி முட்டும்!

"பட பட"-
வாழ்வின் அர்த்தம்-
பிறக்கும்!
--------------------------

10 comments:

  1. வாழ்வின் ஆசை-
    விண்ணையும் தாண்டுது!
    >>>
    எத்தனை புத்தர், யேசு, அல்லா, கண்ணன் வந்தாலும் இந்த ஆசை நம்மை விட்டு போகாது போல.

    ReplyDelete
  2. raji!
    ungal udanadi -
    varavukkum karuthukkum mikka nantri!

    ReplyDelete
  3. //அடுக்கு மாடியில-
    பக்கத்துக்கு வீட்டுக்காரன்-
    பேர் கூட-
    தெரியல-
    இன்று!//

    அருமையாக இன்றைய எதார்த்தங்களை வார்த்தைகளில் அடுக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. syed ibramsha!

      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!0

      Delete
  4. //உயர்வதும்-
    தாழ்வதும்-
    உலகின் நியதி!

    உயர்ந்து விட்டால்-
    செய்யலாமோ-
    அநீதி!?//
    பெருக்கத்து வேண்டும் பணிவு!
    அது மறந்து போய் நடக்குது இந்த அநீதி
    நன்று

    ReplyDelete
  5. ayya!
    ungaludaya varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  6. நாட்டில் நடக்கும் அனுநீதீ பற்றிப்பேசும் கவிதை அழகு அடுக்கு மாடியில் அடுத்த மனிதன் முக்ம் தெரியாது சொல்லும் நிஜம்!!!ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. tanimaram!

      ungaludaya varavukkum-
      karuthukkum mikka nantri

      tani maram-
      ungalukku ezhuththe varam!

      Delete
  7. மனிதனில் நிலை உயர உயர மனிதம் தாழ்கிறது.இதுதான் இன்றைய நடப்பு.கவிதை உள்ளதைச் சொல்கிறது !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungaludaya varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete